திங்கள், 31 மே, 2010

முதல் பதிவு.........

என் தமிழ் ஆர்வங்களுக்கும் ரசனைகளுக்கும் வித்திட்ட என் தந்தை தமிழாசிரியர் திரு இல.க.சுபாஸ் சந்திர போஸ் அவர்களுக்கும் என் திறமைகளை வளர்க்க உதவிய என் அம்மா திருமதி ரமணி அவர்களுக்கும் இந்த வலைப்பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.

நீண்ட நாட்களாக இனிய தமிழில் எழுதிவரும் திரு செல்வேந்திரன், திரு நர்ஸிம், திரு லேகா, திரு கேபிள் ஷங்கர், அக்கினிப்பார்வை, திரு யுவகிரிஷ்ணா, திரு அனிதா மற்றும் பல இனிய வலைப்பதிவர்களுக்கும் எனது நன்றியை சமர்ப்பித்து எனது முதல்பதிவை தொடங்குகிறேன்.



தொடங்கும் முன் அனிதா மற்றும் HVL அவர்களின் வலைப்பதிவு குறித்த பதிவுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

http://idhazhgal.blogspot.com/2010/05/blog-post.html

"ஒரு வலைப்பூவை துவங்குவதென்பது ஒரு குழந்தை பிறப்பதை ஒத்ததாக எண்ணத்தோன்றுகிறது. வலைப்பூவுக்கு பெயரிடுகையில் எழுதப்போகிறவர் மனநிலை சார்ந்தே பெயர்கள் யோசிக்கிறார்கள். எழுதப்படும் கருத்துக்களும் ஆரம்பத்தில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத என் எண்ணம் இது என்பதாய் இருக்கிறது. இந்த வலைப்பூவை துவங்கினால் நாளை நான் பரவலாக அறியப்படுவேன் என்கிற எண்ணம் எதுவும் ஆரம்பத்தில் இருப்பதில்லை. பிறகு எழுதுவது பிடித்து போக சிலர் பாராட்டத்துவங்கிய பிறகு, மெல்ல தனக்கே உண்டான எழுத்து பிறர் பார்வைக்கு மாறத்துவங்குகிறது. மாற்றங்கள் நிறத்திலும், லேஅவுட்டிலும் இருப்பதை தாண்டி புத்திக்குள்ளும் புகுந்துக்கொள்கிறது. நானும் ரவுடி தான் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தெரியுமோ தெரியாதோ யார் வேண்டுமானாலும் பதிக்க முடிகிறது. முக்கியமாக, எல்லாம் தெரியும் என்கிற தொனி சற்று மிரளவே செய்கிறது. அங்கீகாரத்திற்காய் சதா சர்வமும் அலையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது, பிறர் வலைப்பூவில் பின்னூட்டமிட்டால் அவர் நமக்கு பின்னூட்டமிடுவார் என்று கணக்கு போடுதுவதெல்லாம் அங்கீகாரத்தின் நீட்சிகளே..

இப்படியிருக்க, எந்த குழப்பங்களும் யோசனைகளும் இல்லாத அந்த வலைப்பூ துவங்கிய நாளும் ஆரம்பத்து எழுத்துக்களும் எவ்வளவு நேரடியானவை.. மனதுக்கு இதமானவை.. எனக்கு ஏதாவது ஒரு வலைப்பூ வாசிக்க கிடைக்கையில் பழைய எழுத்துக்களையே முதலில் வாசிக்கிறேன். எழுத்தில் தேர்ச்சி வருவதற்கும் எழுத்தின் நோக்கம் மாறிப்போவதற்குமான வித்தியாசத்தை கண்கூடாக உணர முடிகிறது."

-அனிதா

HVL -ன் பதிவுக்கு இங்கே செல்லவும்.......

http://rithikadarshini.blogspot.com/2010/04/blog-post_28.html
 
 
ஒன்பதாம் வகுப்பு.....


என் அனுபவங்களை ரசிக்க கற்றுகொடுத்த வயது..........

தமிழ் ... இலக்கிய மன்றம் ....போட்டிகள்... நண்பர்கள் .....ஆங்கில வகுப்பு அழகிய தோழிகள்...வித்தியாசமான ஆசிரியர்கள்.... கணித ஆசிரியர் திரு காளீசுவரன்.....ஹிந்தி டியூஷன் மிஸ் திருமதி சீதா..... தேரோட்டம் ..பூ திருவிழா.. எங்கள் தெரு தோழிகள்.....

பள்ளி தோழிகளை முன்னிறுத்தி நடந்த அடிதடிகள் ........பயிற்சி ஆசிரியைகள்........அப்பப்பா சொல்லிக்கொண்டே போகலாம்........


இந்த நிகழ்வுகளையும் மற்றும் எனது எண்ணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இந்த வலைப்பதிவை தொடங்குகிறேன்.

தமிழிலில் தட்டச்சு செய்ய எளிய வழி முறைகள் இருந்தால் சொல்லுங்கள் நான் இப்போது பின்பற்றும் முறை கடினமாக உள்ளது.


எனது பதின் வயதில் எழுதிய..... நான் கவிதைகள் என்று நம்பிக்கொண்டிருந்த சில வரிகளை சில பதிவுகளாக வெளியிடுகிறேன்.....ஒரு நகைச்சுவைக்காக.....

இப்போது ஏதும் எழுதுவதில்லை.....தமிழ் உலகம் தப்பித்தது.

செல்வெந்திரன் நர்ஸிம் ஆகியோரது நடை மயக்கும் படியாக உள்ளது...உங்கள் கை பிடித்து நடக்க முயற்சிக்கிறேன்.....உதவுங்கள்............



பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு சில வரிகள்...........



தலைப்பின்றி ஓர் கவிதை.........


தலைப்புகள் வைத்து எழுத தொடங்கினால்
ஒன்றுமே எழுதமுடிவதில்லை
தலைப்பை தவிர........


பலர் புகழுமாறு பத்திரிக்கைகளில் எழுத வேண்டும்
என் பல நாள் எண்ணமிது

வாழ்க்கை பயனுற எழுது....பாடம் படித்தது அறிவு
எனக்கென்ன லாபம்
கணக்கு பார்க்கிறது வணிக மனசு
எதைத்தான் எழுதுவது......
விட்டத்தை வெறித்த படி யோசனையில் மூழ்கிபோனேன்...
சடசடக்கும் வெள்ளைத் தாள்.....
ஏதும் எழுதாமல் இருப்பதுவும் நல்லது தான்
வெள்ளை தாளின் வெறுமை சொல்லிவிடுகிறது


வாழ்க்கைக்கான எல்லாவற்றையும்......

******************************************************************