ஞாயிறு, 6 ஜூன், 2010

அக்கரை......சித்தர்......சுஜாதா......

லேகா மற்றும் நர்சிமின் பதின் வயது நினைவுகளின் பதிவுகள் அருமை.
http://yalisai.blogspot.com/2010/05/blog-post_19.html
http://www.narsim.in/2010/05/blog-post_25.html

லேகாவின் "பாரான்" விமர்சனம் படித்தேன். அருமை. சுஜாதா விருது அவருக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும்.வாழ்த்துக்கள் லேகா.
http://yalisai.blogspot.com/2010/04/blog-post_17.html


கூகுள் வழங்கும் இந்த வசதி என்னைப்போன்ற புதிய வலைபதிவர்களுக்கு இலகுவாக தமிழை தட்டச்சு செய்ய வசதி செய்கிறது.

http://www.google.com/transliterate/indic/Tamil

********************************************************************************

என் ஆறாம் வகுப்பின் போது வெளியில் படித்த ஹிந்தி ட்யூஷனில் "கணையாழி" என்ற பதத்தை எங்கள் மிஸ் சீதா அக்கா பயன்படுத்த கேட்டிருக்கிறேன்.

எல்லோரும் அந்தந்த வயதில் அதற்குண்டான அனுபவங்களை கட்டாயம் அனுபவிக்கிறோம். காலம் நம் அனைவரின் வயதுகளுக்கும் ஏற்ற அனுபவம் ஒன்றை முன்பே தயாரித்து வேளை வரும் போது பிரயோகிக்கிறதோ.....அவை அனைத்தும் பெரும்பாலும் சில விதிகளுக்கு கட்டுப்பட்டதுதானோ........

சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களை வாசிக்கும் அளவுக்கு இப்போதுதான் வளர்ச்சி அடைந்திருக்கிறேன்.

மனுஷன் அப்போவே ப்ளாக் இல்லாத குறையை அவராகவே தீர்த்திருக்கிறார். ஒளிவு மறைவு இல்லாத அவரின் சுவாரசியமான நடை அவருக்கே உரித்தான ஒன்று.

அக்கால நடவடிக்கைகளின் பிரதிபலிப்பை நேர்மையாக அணுகுகிறார்.

கவிதை எதுவும் எழுத நினைக்கும் போது மனக்கண்ணில் தோன்றி பயமுறுத்துகிறார்.

"என்னைய்யா விளையாடுகிறீர்களா?" என்று நிஜமான அக்கறையில் தனது அதிருப்தியை வெளியிடுகிறார்.

அவர் குறிப்பிடும் இந்த பாடல் மனதில் ஒட்டிக்கொண்டது. அதன் கோபத்திற்கு அதன் எளிய நடைக்கு அதன் ஓசைக்கு.

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா

இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே.
                                                                                -சிவவாக்கியர்.

சின்ன வயதில் என் அண்ணன் எதையோ ரசனையாக பாடிக்கொண்டிருப்பான்.
அப்போது அதன் ஓசை நயத்தில் அதுவாகவே வந்து மனதில் பதிந்து கொண்டது.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே

சுற்றி வந்து மொனமொனந்து சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதர் உள்ள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

சித்தர் பாடல்கள் ஒரு வித ஆளுமை நிலையை ஒரு பரவசத்தை நம்முள் நிகழ்த்துகின்றன.
தேடி படிக்க வேண்டும். அப்பாவின் நூலகத்தை அருகில் இருந்தும் நுகர மறந்த பாவத்தை இனியாவது செய்யக்கூடாது.
சுஜாதாவுக்கும் என் அண்ணனுக்கும் நன்றிகள். அப்பாவிற்கும்.



அக்கரை சீமையின் தனிமை சனி ஞாயிறு

சித்தரை முணுமுணுக்க செய்த சுஜாதா

நித்திரை மறக்கடித்து கணினி முன்னமர்ந்து

பதிவுரை எழுதவைத்த நல்ல தமிழ் இணையம் வாழ்க.


-கபிலன்.

1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கபிலன்

சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் வாசிக்கிறீர்களா ! நன்று நன்று. நல்ல துவக்கம் . தொடர்க !

சித்தர் பாடல்கள் படிக்க வேண்டிய ஒன்று

நல்வாழ்த்துகள் கபிலன் !
நட்புடன் சீனா

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....