ஞாயிறு, 4 ஜூலை, 2010

எங்கிருந்தோ வந்தான்....2

இரண்டு பதிவுகளுக்கு தொடரும் போட்டாச்சு.....

நிறைய டைப் செய்ய கடினமாக இருக்கிறது...உங்களுக்கு படிப்பதும்..(இது கொஞ்சம் ஓவர்...ok..அந்த நாலு பேருக்கு...) மேலும் இப்போது கிடைக்கும் நேரம்...சென்னை சென்றதும் இருக்குமா என தெரியவில்லை..

இருப்பினும் மனம் தளராமல் முயற்சிக்கிறேன்....இன்னும் பகிர அநேக விடயங்கள் என் குறிப்பேடுகளில் உள்ளன....

ஓகே ...லெட்ஸ் கெட் இன் டு சப்ஜெக்ட்....

எங்கிருந்தோ வந்தான்....2


எங்கிருந்து  எனில்...இங்கிருந்து வருகிறான்...


"பிள்ளையார் பட்டி அழகே தனிதான் என்னடா சொல்ற...?"

"ஆமா.....சின்ன கிளாஸ் படிக்கும்போது அப்பாவோட வந்திருக்கேன்....குன்றக்குடி அடிகளாரை பார்க்க.. திருப்புகழ் சொல்லி பாராட்டெல்லாம் வாங்கினேன். அப்புறம் இங்க மோதகம்-ன்னு ஒன்னு குடுப்பாங்க..கொழுக்கட்டை மாதிரி..நல்ல டேஸ்ட்"

"பரவால்லையே...நிறைய ஞாபகம் வச்சுருக்க....."

"நம்ம பலமும் அதுதான்...பலவீனமும் அதுதான்...."

"குமரன்...என்ன பண்ணிக்கிட்டு இருப்பார்.....?"

"என்ன பண்ணுவார்...குப்புறடிச்சு தூங்கிகிட்டு இருப்பார்...நீ அவருக்கு கொஞ்சம் ஓவரா இடம் தர்றியோ-ன்னு தோணுது."

"கம்மான் சரவணன்....ஒரு புது ஆள்...நம்ம ஊருக்கு..ஏதோ நம்மளால முடிஞ்சது....இந்த பொட்ட காட்டுல நம்மளா சுத்திகிட்டு இருப்போம்.இப்போ புதுசா ஒரு ஆளோட அறிமுகம்...நல்லதுதானே...நீயும் கம்போர்டா பீல் பண்ணுவன்னு நினைச்சேன்..."

"டேய்..அப்படியில்லடா...நேத்துதான் பாத்தோம் அதுக்குள்ள கொஞ்சம் ஓவரா நெருக்கம் காட்டுரோமே....அவர் யாரு..எந்த வூரு...ஆள் எப்படி....நமக்கு ஏதும் பிரச்னை வரக்கூடாது பாரு..? அதுக்குத்தான்."

"உன் மண்டைய கொஞ்சம் பினாயில் ஊத்தி கழுவு....ஒரு இன்ஜினியரிங் கிராஜுவேட். அதுவும் எம்.டெக். அவர்தான் நம்மள அநீசியா பீல் பண்ணனும். என்ன பிரச்னை வரும்..."

"சாரிடா..."

"ஓகே..ஓகே..ஆள் கொஞ்சம் குட்டை..நல்ல கருப்பு...குண்டு...ஆனா முகம் மட்டும் நல்ல களை. நல்லா சிரிக்கிறார்ல...உன்னை மாதிரி."

"முகம் கொஞ்சம் விவேக் சாயலா இருக்கு...நல்லா பேசுறார்....அவன் யார்ரா....அவரோட பிரண்ட்...என்னமோ ஓவரா படம் போடுறார்....நான் சமைப்பேன்..அவன் வெளில சாப்பிடுவான்...அப்படின்னு.."

"என்ன லூசு கதை இருக்கோ..அதுக்குள்ள....நாமளும் ஒரு எட்டு வருஷமா பழகுறோம்...ஒரு தடவை சண்டை போட்டிருப்போமா..."

"மறந்துட்டீங்களா சார்....பத்தாவது படிக்கும்போது ஒரு சண்டை...காரணமெல்லாம் மறந்துபோச்சு...ஆனா கொஞ்ச நாள் பேசாம இருந்திருக்கோம்..அம்மா தான் சேத்து வச்சாங்க...."

"அட ஆமால்ல..."

"நீதாண்டா ரொம்ப வீராப்பா இருந்த...நான் கொஞ்சம் செண்டிமெண்ட்..நீ அப்படியில்லை."

"நானும் அப்படி இருந்தேன்னா...உன்னமாதிரி..அப்பப்போ கவிதை அது இதுன்னு புலம்பி அழுதுக்கிட்டு இருப்பேன்."

"உனக்கு வராத ஒரு விஷயத்துக்கு என்னை ஏண்டா இழுக்குற....பட் நீதான் நம்ம முதல் ரசிகர்."

"படம்லாம் ஏதும் வரையிரியா....நீ எனக்கு லெட்டர் போடும்போது கவர்ல வரையிற படத்தை பார்க்கவே காலேஜ்ல...ஒரு பட்டாளமே இருக்கும். சார்க்கு படம் போட்டு அவர் காதலிகிட்டே இருந்து லெட்டர் வந்துருச்சுடான்னு கிண்டல் பண்ணுவாங்க...."

"எஸ்....தனியா இருக்கும்போது....அதை சமாளிக்க....அப்படி சும்மா வரைவேன்...அதை செய்யும்போது...பார்த்து நீங்கள் எப்படி ரசிப்பீர்கள் என்று கற்பனை செய்துகொண்டே இருப்பேன்.அந்த சுகம் எனக்கு நானே உருவாக்கிகிட்டது...ஒரு போதை மாதிரி.."

"ஹல்லோ ஏதோ சுமாரா காப்பி அடிச்சு வரைவ...என்னமோ ரவிவர்மா ரேஞ்சுக்கு பீல் குடுக்குற....டேய்..டேய்...நோ...கை வலிக்குதுடா.....நீ வரஞ்ச அந்த பெண்ணோட முகம் நல்லா இருந்துச்சு...அப்புறம்...அந்த பட்டர்ப்ளை...அவ்வளவுதான்....ஞாபகம்.."

"ஒகே பாஸ்..ரொம்ப நேரம் ஆச்சு.. அம்மா பிள்ளையார்ட்ட பேசி முடிசுட்டங்களான்னு பாத்துட்டு வர்றேன்."

"எங்க வீட்ல எங்கடா போனாங்க....."

"அங்க பாரு...அந்த பாறைல உக்காந்துருக்காங்க....."

"சேரி சீக்கிரம் வா....பசிக்கிது......சாப்பிடலாம்...."

(வருவார்கள்.......)

                                           #@#

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

அண்ணே அடுத்தது தொடரா .. கலக்குங்க ..

கபிலன் சொன்னது…

நன்றி ராம்ஜி...
செந்தில் அண்ணே....நான் சின்னவன்...
ஏதோ நம்மளால முடிஞ்சது...நன்றி....

Unknown சொன்னது…

"நம்ம பலமும் அதுதான்...பலவீனமும் அதுதான்...."

உண்மைதான்.
தொடருங்கள்

கபிலன் சொன்னது…

அன்பின் கந்தசாமி.....

மறதி ஒரு நல்ல விஷயம். பல நேரங்களில்..

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....